சமாதானத்திற்கு அழைக்கும் டெலோ!



உள்ளுராட்சி சபை தேர்தலில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளை தோற்கடிக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அழைப்பு விடுத்துள்ள நிலையில் உள்ளூராட்சி மன்றங்களில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் செயற்பட தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) இலங்கை தமிழரசுக்கட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புஇ கட்டுப்பாட்டுடனும் சரியான நிர்வாக அமைப்புடனும் செயல்படுவதன் அவசியம் குறித்தும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) வல்வெட்டித்துறை நகரசபை சம்பந்தமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

No comments