இலங்கையில் அரசியல்வாதிகளிற்கும் 60 இல் ஓய்வு!

 


நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் மஹாதீர் முகமட் அல்லது லீ குவான் யூ போன்றவர்கள் என நினைத்து வேலை செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

65 வயது வரை இருந்த அரசுப் பணி ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பது நல்லது என்றும், இளைய தலைமுறையினரின் நலனுக்காக அதைச் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் இது பாராளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கும் பொருந்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments