பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த விளையாட்டு வீரர் மற்றும் அதிகாரியைக் காணவில்லை!


இங்கிலாந்தின் பேர்மிங்காமில் நடைபெற்று வரும் 22வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஐந்தாவது நாள் நிகழ்வுகளின் பின்னர், இலங்கை விளையாட்டு வீரரும் உயர் அதிகாரியும் இன்று செவ்வாய்க்கிழமை காணாமல் போயுள்ளனர்.

திங்கட்கிழமை தனது முதல் சுற்று போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, பெண் ஜூடோ வீரரும் இலங்கை ஜூடோ அணியின் முகாமையாளரும் இலங்கை முகாமில் இருந்து காணாமல் போயுள்ளதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் காணாமல் போனது குறித்து இலங்கை அணி நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளதுடன், பர்மிங்காம் பெருநகர பொலிசார் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன் விளைவாக, இலங்கைக் குழுவின் செஃப்-டி-மிஷன் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) தம்பத் பெர்னாண்டோ, மேலும் காணாமல் போவதைத் தவிர்ப்பதற்காக இலங்கைக் குழுவின் அனைத்து கடவுச்சீட்டுகளையும் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார்.

மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் அடங்கிய ஜூடோ அணியுடன் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக இலங்கை 110 பேர் கொண்ட பலமான குழுவையும் 51 அதிகாரிகளையும் களமிறக்குகிறது.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக அனைத்து இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 180 நாள் விசா வழங்கப்பட்டுள்ளது.

No comments