வவுனியாவில் யானை தாக்கி முதியவர் உயிரிழப்பு


வவுனியா, சேமமடு கிராமத்தில் காட்டுக்குள் தேன் எடுக்கச் சென்ற முதியவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் வவுனியா, சேமமடு பகுதியில் வசிக்கும் 68 வயதுடைய முதியர் என அடையாளம் காணப்பட்டார்.

காடு நோக்கி ஈருறுளியில் சென்றுகொண்டிருந்த போது, வீதியின் குறுக்கே நின்ற யானை அவரை தாக்கியுள்ளது. 

சம்பவ இடத்திலேயே முதியவர் மரணமடைந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் அதனை அவதானித்து காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.

No comments