டேவிட் மெக்லாக்லனை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டோர்!



ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின்  ஆசிய-பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லனை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்க பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்துள்ளனர்.

டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, சிவில் மற்றும் இராஜதந்திர தரப்பினரை  சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அவர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு  அரச மற்றும் சிவில் சமூக குழுக்களை சந்திக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்க பிரதிநிதிகளை சந்தித்து பேசியிருந்தார்.இச்சந்திப்பில் அரசியல் கைதிகளது விடுதலைக்காக போராடிவரும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் இணைந்திருந்தார்.

இதனிடையே யாழில் மாவட்ட செயலரையும் அவர் சந்தித்திருந்தார்.




No comments