முட்டை,இறைச்சி விலையும் மூன்று மடங்காகியது!

 




இலங்கையில் முட்டையின் விலை மூன்று மடங்காகி 62ரூபாவாகவும்,இறைச்சி விலையும் கிலோ 550 இலிருந்து 1800 ஆகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் இந்தியாவிலிருந்து முட்டை மற்றும் இறைச்சியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே சந்தையில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை அதிகரித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நித்திரை முழித்துள்ள அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனத்தை இறக்குமதி செய்வதற்கான நிதி வசதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


No comments