மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார் கோட்டா


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார், பசில் ராஜபக்ச அமெரிக்கா சென்றுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது

73வயது கோத்தபாய ராஜபக்ச மாலைதீவு தலைநகருக்கு உள்ளுர் நேரப்படி 3.00 மணிக்கு வந்து சேர்ந்தார். இராணுவ விமானமொன்றில் இலங்கையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதன் மூலம் அவர் இலங்கையை ஒரு தசாப்தகாலத்திற்கு மேல் ஆண்ட ராஜபக்ச வம்சாவளியின் வரலாற்றைமுடிவிற்கு கொண்டுவந்துள்ளார் என பிபிசி தெரிவித்துள்ளது.

இதேநேரம் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட  அன்டொனோவ் 32 விமானத்தில் 73 வயது கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் காணப்பட்டனர் என குடிவரவுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களது கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் விசேட விமானப்படை விமானத்தில் ஏறினார்கள் என இந்த நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்த குடிவரவுதுறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மாலைதீவிற்கு செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விமானம் ஓடுபாதையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் தரித்துநின்றது பதற்றமான நிலைமை காணப்பட்டது இறுதியில் அனைத்தும் சரியாகவிட்டன தன்னை பெயர் குறிப்பிடவிரும்பாத விமானநிலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments