கோட்டாபாய நாட்டுக்குத் திரும்புவார் - அமைச்சரைப் பேச்சாளர் தெரிவிப்பு!


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (26)அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்றது. அதில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் தலைமறைவாகவில்லை. அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் . அவர் நாட்டுக்கு வருகை தரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் பந்துல இதன்போது கூறினார்.  

புகையிரத திணைக்களம் தற்போது நாளொன்றுக்கு 10 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொள்கிறது. அந்த நஷ்டத்தை ஈடுசெய்வதற்காகவே புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாறு தொடர்ந்தும் புகையிரத திணைக்களத்தில் நஷ்டத்தில் இயங்க இடமளிக்க முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத்திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும், சர்வக்கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் பந்துல மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி, ஜூலை 14 அன்று தனிப்பட்ட பயணமாக நாட்டிற்கு வந்த முன்னாள் ஜனாதிபதிக்கு கோட்டாபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் 14 நாட்கள் சிங்கப்பூரில் தங்கியிருக்க குறுகிய கால பயண அனுமதியை வழங்கியிருந்ததை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments