அரசாங்க நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு: யாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்!


யாழ்பாணத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில்  இன்று செவ்வாய்க்கிழமை (26) மதியம் 12 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்கெடுத்தனர்.

அவர்கள் அரசாங்கத்தினுடைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுன், மக்களுடைய போராட்டத்திற்கு மதிப்பளி, நாட்டை கொள்ளையடிக்காதே, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே,  காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வழங்கு போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு விரிவுரையாளர்கள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


No comments