சுமந்திரன் ஆதரவாளர்களின் கறுப்பு யூலை நினைவேந்தல்!

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று மேற்கொள்ளப்பட்டது.

வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் சுமந்திரனின் ஆதவாளர்களால் இன்று சனிக்கிழமை (23)  காலை 10.30 மணியளவில்  இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

நினைவேந்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வடமாகாண சபை முன்னான் உறுப்பினர்களான ச.சுகிர்தன், கே.சயந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


No comments