கட்சித் தலைவர்கள் முடிவு: ஜனாதிபதி, பிரதமரை ராஜினாமா செய்ய வேண்டும்; தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர்?


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எதிர்ப்புகளை அடுத்து எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி ராஜபக்ஷ முன்னதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற அனைத்து கட்சிகூட்டத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும் என தீர்மானிக்கப்பட்டமை குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும் பதில் ஜனாதிபதியை நியமிப்பதற்காக ஏழு நாட்களிற்குள் நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என சபாநாயகர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமருடன் புதிய நிர்வாகத்iதை ஏற்படுத்தவேண்டும்,குறிப்பிட்ட காலத்தின் பின்னர் பொதுத்தேர்தலிற்கு செல்லவேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments