சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என, கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த தீர்மானத்தை மேற்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.  விரைவில் இறுதி செய்யப்படும்.

குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று அவர் கூறினார்.

No comments