சிங்கள இராணுவத்திற்கு பெண்கள் ஒன்றே!
சிங்கள படைகளிற்கு பெண்கள் என்பவர்கள் தமிழச்சி,சிங்களத்தி என பாகுபாடு இல்லை.யார் அக்கப்பட்டாலும் பாலியல் வல்லுறுறவு, அடித்து நொருக்க சிங்கள படைகள் தவறுவதில்லையென போட்டுத்தாக்கியுள்ளனர் சிங்கள செயற்பாட்டாளர்கள்.
நேற்றைய தினம் சக்தி பெண் ஊடகவியலாளர் ஒருவர் சிங்கள படைகளால் தாக்கப்பட்டநிலையில் 2009 இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பரியாவை அவர்கள் நினைவுகூர்ந்துள்ளனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiHUa3PJIjbY6kQbupRyyi9KfnU8a9kgwvywHRsTO3QVudG-5gicEAhWnb9_VEN0iEgaCjybfZvFkv70kbw3nenL-oCxkgMJOa19qcFYakTjFTZe9hNB5kiVOJFVmulN62-Dr7l001TRwjhtWxtgwIfiLzuAUGHVPE-sX8xn4_f0zeEAYpvC4jXU0Uljw/s16000/m22.jpg)
அரசாங்கத்திற்கு எதிராக நேற்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களில் 103 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் பலர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருநது சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், மேலும் 55 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 11 ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்றிரவு (09) ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஊடகவியலாளர்கள் பலரையும் தாக்கியுள்ளனர்.
அவர்களில், ´அத தெரண´ மற்றும் ´சிரச´ செய்தியாளர்களும் ஊடகவியலாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கவலை தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment