அவசியமாகிறது முகக்கவசம்:நேற்று இரட்டை மரணம்!



மீண்டும் முகக்கவசம் அணிய இலங்கையில் சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் நேற்று உயிரிழந்துள்ளதுடன், 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 664,975 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்த இருவரும் ம 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.

இதேவேளை நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதால் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போதும் பொது இடங்களிலும் முகக்கவசம் அணியா வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

No comments