சஜித்-மைத்திரியுடன் சி.வியும் சந்திப்பு!



 எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார்.

அதேவேளை தமிழ் தரப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுத்திருந்தார்.



அந்தக் கூட்டத்தில், 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் உட்கட்சி அரசாங்கம் தொடர்பில் பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டன. அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பான இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர்.

No comments