ராஜபக்சக்களை விரட்டினாலேயே தீர்வு:யாழ்.ஆயர்!



இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட்  ஞானபிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த சமுத்திரத்தின் முத்து என்று சொல்லப்பட்ட இந்த நாடு இன்று பிச்சை எடுக்கின்ற நாடாக மாறி உள்ளது .

ஏனென்றால்  நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாட்டை சுரண்டப்படுகிறதால் இன்றைய நாடு படுகுழியில் வீழ்ந்துள்ளது.

அண்மையில் ஐ எம் எப் நிறுவனம் பல கேள்விகளை கேட்க இருந்தது முன்னாள் பிரதம மந்திரியிடம்  37 கேள்விகள் அவர்களால் கேட்கப்பட இருந்தது .அதாவது ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் கேட்க விருந்தார்கள் . ஆனால் அவர் வைத்தியசாலையில் அனுமதி ஆகிவிட்டார்அதனால் அவர்கள் கேட்க வேண்டிய கேள்வியினை கேட்காது சென்று விட்டார்கள் 

எந்த நாடும் எமக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றார்கள் ஆனால் இந்த மோசடி ஊழல் நிறைந்த இந்த நாட்டு அரசாங்கத்தை நம்பி எந்த நாடும் நமக்கு உதவுவதற்கு தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments