யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!


யாழில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் இணுவில் கிழக்கு பகுதியை சேர்ந்த யோகராசா சதீஸ் (வயது 26) எனும் இளைஞனே நேற்று வெள்ளிக்கிழமை  உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டார் பழுதடைந்ததால், அதனை திருத்த முற்பட்ட வேளையே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

No comments