தனுஷ்கோடியைச் சென்றடைந்த நான்கு அகதிகள்


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்றுகொண்டுள்ளனர். அந்தவகையில் மேலும் நான்கு தமிழர்கள் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

நேற்று இரவு வவுனியா மாவட்டத்தை சேர்ந்த  டோமினிக் (42), அவரது மனைவி சுதர்சனி(24) அவரது ஆறு வயது மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மகேந்திரன் (50) உள்ளிட்ட 4 பேர் ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று காலை சுமார் 05.00 மணி அளவில் தனுஸ்கோடியை அடுத்த நான்காம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

மணல் திட்டில் சுமார் 4 மணிநேரமாக சிக்கி தவித்த இலங்கை தமிழர்கள் குறித்து அப்பகுதியில் மீன் பிடித்துகொண்டிருந்த மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் மெரைன் காவல்துறையினர் படகில் சென்று  அவர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments