சிறுமி கடத்தல்: யாழில் இருவர் கைது!


யாழ்ப்பாணத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டது தொடர்பில் இரு இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நகர் பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக உறவினர்களால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை குறித்த சிறுமி, கிளிநொச்சி பகுதியில் வைத்து கிளிநொச்சி காவல்துறையினரால் மீட்கப்பட்டு , கிளிநொச்சி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இளைஞர் குழு ஒன்றினால் தமக்கு தொடர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாகவும் அது தொடர்பிலும் காவல்துறையினருக்கு அறிவித்தும் எந்த நடவடிக்கைகளையோ அல்லது விசாரணைகளையோ முன்னெடுக்கவில்லை எஎன வடமாகாண ஆளூநர் அலுவலகத்திலும் உறவினர்கள் முறையிட்டு இருந்தனர். 

சிறுமியின் உறவினர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்களை கைது செய்து யாழ்ப்பாண காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments