வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு!


வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளியம்மன் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள வாகனங்கள் சுத்திகரிப்பு மேற்கொள்ளும் நிலைய வளாக கிணற்றிலிருந்து  இன்று புதன்கிழமை 22 ஆம் திகதி காலை ஆணின்  சடலம் மீட்கப்பட்டது.

சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகர் பகுதியில் இயங்கும் தனியார் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 50 வயதுடைய அழகர்சாமி விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டார்.

நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியேறிய நிலையிலேயே இன்று காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது மரணமா, தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



No comments