விமானத்தில் தமிழகம் சென்று அகதியான காவல்துறை?



திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் விசா மூலம் கொழும்பில் இருந்து சென்னை  சென்று பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ளார்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அவர் திருகோணமலையில் கடந்த 2012 ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை இலங்கை காவல் துறையில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு அவர் தனது பணியை விருப்ப ஓய்வு கேட்டு வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில் விசா மூலம் தமிழகம் வந்த இவர் தமிழகப் பகுதிகளில் உளவு பார்க்க வந்தாரா என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு துறையினர் 5 மணி நேரம்  தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர்.


No comments