எரிபொருளே இல்லை:கூட்டம் கூடும் அதிகாரிகள்



இலங்கை முழுவதுமாக எதிர்வரும் ஜீலை 10ம் திகதி வரை தனியாருக்கான எரிபொருள் விநியோகத்தை அரசு இடைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில் யாழ் மாவட்ட எரிபொருள் விநியோகம் தொடர்பாக, இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் விநியோக ஒழுங்குபடுத்தும் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், யாழ் மாவட்டத்தில் பிரதேச செயலகங்களுடன் இணைந்து இராணுவத்தினர் பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments