எரிபொருள் தாமதமாகும்:வீதிக்கு வரவேண்டாமென்கிறார் அமைச்சர்!



இலங்கைக்கு பெற்றோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் கப்பல்கள் இந்த வார ஆரம்பத்திலும் அடுத்த வாரமும் வருவதை உறுதி செய்த எரிபொருள் வழங்குநர்கள், வங்கி மற்றும் பிற காரணங்களுக்காக சரியான நேரத்தில் எரிபொருள் விநியோகிக்க முடியாது என்று தெரிவித்துள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அடுத்த எரிபொருள் தொகுதி துறைமுகத்தில் இருந்து இறக்கப்படும் வரை, பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

அடுத்த வாரம் முழுவதும் வரையறுக்கப்பட்ட டீசல் மற்றும் பெற்றோல் வரையறுக்கப்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.

எரிபொருள் வருகைத் திகதியை உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அடுத்த மசகு எண்ணெய்  தொகுதி வரும் வரை சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் தற்காலிகமாக மூடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

No comments