அரசியல் கைதிகள் பலருக்கு நோய் தொற்று!



புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் புதிய மகசின் சிறைச்சாலையில் ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் தமிழ் அரசியல் கைதிகள் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வைத்தியம் பெறுவதற்கான மருந்துகள் கூட பெரும் தட்டுப்பாடாக உள்ளது. 

குறிப்பாக  தற்போது சாதாரணமான பனடோலைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகின்றது. 

நாட்டை சூறையாடி பொருளாதாரத்தை நலிவடையச் செய்த நபர்கள் தப்பியோடக்கூடிய சூழலில் சாதாரண குற்றம் செய்ததற்காக 10 தொடக்கம் 26 வருடங்கள் வரை தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோமகன் கோரிக்கை விடுத்துள்ளார்.


No comments