மகிந்த கடிதத்தை கொடுத்தாரா?
நாட்டில் தொடர்ந்தும் அதிகரித்துவரும் நெருக்கடி நிலையின் தொடராக பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அலரி மாளிகையில் பொதுஜன முன்னணியினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஏற்பட்ட சலசலப்பின் தொடராக குறித்த கடிதம் கையளிக்கப்பட்டிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரதமராக பதவி வகித்த மஹிந்த ராஜபக்ச, பதவி விலகுவதாக தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளித்துள்ள நிலையில், அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் ஆளுகையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது..
Post a Comment