தமிழ்க் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்


தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

No comments