தொடங்கியது சூடு: சேர் மீண்டும் பிசி!



 பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்று (23) இரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த   ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டில் வைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அண்மைய போராட்டங்களின் பின்னணயிலிருந்தவரென முதல் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதனிடையே காலிமுகத்திடலிற்கு செல்லும் வீதிகள் அவசர அவசரமாக நிரந்தரமாக கம்பிகள் மூலம் முடக்கப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.



No comments