மொட்டு முன்னாள் பங்காளிகள் தனித்து கூட்டம்!



இலங்கைப்பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஆளும் கட்சியின் 10 பங்காளிக்கட்சிகள் ஆகியனவற்றின் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆளும் கட்சியின் பங்காளிக்கட்சிகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் இன்று கூடியதன் பின்னர், ஏனைய இரண்டு கட்சிகளையும் சந்திக்கவுள்ளனர்.


No comments