தையிட்டி விகாரை:சட்டவிரோதமென அறிவிப்பு!



தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் உள்ளுராட்சி சபையினால் அறிவித்தல் பலகை நாட்டப்படவுள்ளது. 

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் காங்கேசன்துறை வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள "திஸ்ஸ விகாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்பட்டிருக்காத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளிற்கேற்ப அக்கட்டடமானது சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் பிரேரணை ஒன்று சபையில் கொண்டுவரப்பட்டது.

பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்தோடு சட்ட விரோத தையிட்டி விகாரையின் விகாராதிபதியின் பதவி உயர்வுக்காக எதிர்ப்பை அனைத்து தரப்புக்களும் இணைந்து தீர்மானமாக நிறைவேற்றியுள்ளன.

அதேவேளை காங்கேசன்துறையின் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments