ஒருவார முடக்கம் கிடப்பில்!



இலங்கையில் ஒரு வாரம் நாட்டை முடக்கினால் போராட்டங்கள் மேலும் வலுக்கும் என்ற புலனாய்வு பிரிவின் அறிக்கையினையடுத்து தனது திட்டத்தினை கைவிட்டு பின்வாங்கியுள்ளது கோத்தபாய அரசாங்கம்.

இதனால் இன்று மாலை முதல் ஒருவார காலத்திற்கு நாட்டை முடக்கும் ஊரடங்கு இல்லையென பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை சீர் செய்ய ஏதுவாக ஒரு வார கால முடக்கத்திற்கு திட்டமிட்ட போதும் காலிமுகத்திடல் போராட்டத்தை முடக்கவே இதனை அமுல்படுத்த முற்பட்டமை அம்பலமாகியுள்ளது.


No comments