ஈபிடிபி யோகேஸ்வரியும் ராஜினாமா!



இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட ஞானசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அஸீஸ் நிஸாருத்தீன் என்பவர் விலகியுள்ளார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அஸீஸ் நிஸாருத்தீன்; பதவியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அவரது வெளியேற்றத்தையடுத்து குழுவினில் இடையில் செருகப்பட்ட மூன்று தமிழர்களான இராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன், யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் ஐயம்பிள்ளை தயானந்தராஜா ஆவகியோரும் விலகிச்செல்ல தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


No comments