காவலுக்குச் சென்றவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு


மட்டக்களப்பு  கரடியனாறு  ஈரக்குளம் வயல்பகுதில் கொட்டகை ஒன்றில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர்  வெட்டுகாயங்களுடன்; உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று திங்கட்கிழமை (14) மீட்கப்பட்டுள்ளார்.

ஈரளக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான 54 வயதுடைய பரசுராமன் ஆறுமுகம் என்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வயல் பகுதியில் உள்ள வேளாண்மை செய்கையை  காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வயல்பகுதியில் அமைந்துள்ள கொட்டகைக்கு சென்ற நிலையில் திங்கட்கிழமை வீடு திரும்பாத நிலையில் அவரை தேடியபோது கொட்டகையில் வெட்டுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டார்.

No comments