நாளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேருந்துகள்!



இலங்கையில் நாளை பாடசாலைகள் திறக்கப்படுகின்ற நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

காலையிலும் மாலையிலும் பாடசாலைமாணவர்கள் அலுவலக ஊழியர்களை கருத்தில்கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுகு விஜயரட்ண தெரிவித்துள்ளார்.

இரவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என அவர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டு;ப்பாடு காரணமாக 25 வீத தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு முன்வந்த போதிலும் இது தொடர்பில் கசப்பான விடயங்கள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

நாளாந்த சேவைக்கு டீசல் பெருவதில் பெரும் சிரமங்களை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளும் எதிர்கொண்டுள்ளன என தெரிவித்துள்ள அவர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்தே எங்களால் எரிபொருளை பெறமுடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக  நீண்டதூர பேருந்துசேவை சாத்தியமற்றதாக மாறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments