சுவிசில் நடைபெற்ற நான்கு மாவீரர்களதும் மாமனிதரதும் நினைவேந்தல்!

சுவிசில் நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு.

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 12.02.2022 அன்று கிளாறூஸ் மாநிலத்தில் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவித்தலைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. 

தற்போது நோய்த்தொற்றுச் சூழ்நிலையிலும் அதற்குரிய பாதுகாப்பு நடைமுறை விதிமுறைகளைப் பேணி மக்கள் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வின் இறுதியாக 'நம்புங்கள் தமிழீழம்…" பாடலைத் தொடர்ந்து உறுதியுடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.

No comments