உக்ரைன் போர்: கருங்கடலுக்கான நுழைவாயிலை கட்டுப்படுத்தும் முயற்சியில் துருக்கி


கருங்கடலுக்கான நுழைவாயிலைக் கட்டுப்படுத்தும் முயற்சி நோக்கி துருக்கி நகர்கிறது.

போர் காலத்தில் போர்க் கப்பல்கள் கருங்கடலின் நுழைவாயில் உள்ள ஜலசந்தியை மூட அனுமதிக்கும் சர்வதேச மாநாட்டு ஒப்பந்தத்தை விதிமுறைகளை துருக்கி செயல்படுத்தும் என்று துருக்கியின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறினார்.

1936 மாண்ட் 1936 மாண்ட்ரீக்ஸ் மாநாடு போர்க் கப்பல்கள் போர்க்காலத்தில் டார்டனெல்லஸ் மற்றும் போஸ்பரஸ் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் உரிமையை துருக்கிக்கு வழங்குகிறது. 

உக்ரைன் துருக்கியை இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவும், ரஷ்ய போர்க்கப்பல்களை அணுக தடை விதிக்கவும் கேட்டுக் கொண்டது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை எர்டோகன் விமர்சித்தார். ஆனால் மாஸ்கோ அல்லது கீவ் உடனான உறவுகளை தனது நாடு விட்டுக்கொடுக்காது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments