வடகிழக்கை தொடர்ந்து மலையக காணியில் கை வைத்த அரசு!



வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டது போல, மலையகப் பகுதிகளில் உள்ள காணிகளையும் கையகப்படுத்தும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் காணிசுவீகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

பசறை, கோணகலை பகுதியில் அரசாங்கத்தின் ஆதரவுடன் தோட்டக்காணிகளை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரத்தினபுரி, நெலுவ உள்ளிட்ட பல பகுதிகளிலும் இவ்வாறான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தகைய செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கத்தின் பங்காளிகளாகவுள்ள மலையக மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கோரியுள்ளார்.

No comments