மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் பலசரக்கு கடை ஒன்றில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கடையின் உரிமையாளர் ஒருவரை நேற்று திங்கட்கிழமை (21) இரவு 1,700 கிராம் கேரள கஞ்சாவுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய ஏறாவூர் முதலாம் பிரிவு கலைமகள் வித்தியாலய வீதியிலுள்ள குறித்த பலசரக்கு கடையை முற்றுகையிட்டனர்.


இதன்போது கடை உரிமையாளர் தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த  1, 700 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் 53 வயதுடையவர் எனவும் நீண்ட காலமாக கடையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments