மாட்டிறைச்சி கடைகளுக்கு பூட்டு


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை, மாட்டிறைச்சி விற்பனை செய்ய நிர்ணயித்துள்ள விலையை கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து மாட்டிறைச்சிக் கடைகளையும் மூடப்பட்டுள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மாட்டிறைச்சி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், கலவன் இறைச்சி 850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபரின் தலைமையில் கடந்த 16 ஆம் திகதி நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

குறித்த கூட்டத்தில் எமது சங்கத்திலுள்ள இறைச்சிக் கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களது நியாயமான காரணங்களை முன்வைத்த போதும் பிரதேச சபை அதனை மறுத்து தன்னிச்சையாக மாட்டிறைச்சிக்கு நிர்ணய விலையை மக்கள் மத்தியில் அறிவித்துள்ளது.

இதனால் எமது தொழிலாளர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

No comments