தந்தையும் மகனும் சடலங்களாக மீட்பு!!


மட்டக்களப்பு வாகரை காயான்கேணி கடலில் மீன் பிடிக்கச் சென்ற தந்தையும் மகனும்  சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை இவர்கள் இருவரது சடலங்களும்  காயன்கேணி கடல் பரப்பில் இருந்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளது.

கண்ணகி அம்மன் கோவில் வீதி காயான்கேணியைச் சேர்ந்த மு.திசநாயகம் வயது (56) என்ற தந்தையும் தி.அகிலவாசன் (21) வயதுடைய மகனுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 


கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை வழக்கம் போல் இருவரும் இயந்திரப் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். கடலுக்குச் சென்றவர்கள் மறுநாள் கரையை திரும்பாமல் நேரமாகியதால் சந்தேகம் கொண்டு உறவினர்கள் கடலில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது அவர்கள் சென்ற படகு தனிமையில் கடல் பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக வாகரை காவல்துறை மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் பிரதேசத்தின் உள்ளூர் சுழியோடிகள் மற்றும் கல்குடா தியாவட்டவான் சுழியோடிகள் இணைந்து காலை முதல் மாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டு அவர்கள் மூழ்கிய இடத்தில் இருந்து சடலங்களை மீட்டுள்ளனர்.


No comments