டக்ளஸ்:வயிற்றில் அடிக்க வேண்டாம்!



வடக்கில் கடலட்டை பண்ணை அமைப்பதாக டக்ளஸ் கல்லாகட்டிவருகின்ற நிலையில் பொருத்தமற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அம்பலப்படுத்தியுள்ளார் கடற்றொழில் சார் நிபுணர் ஒருவர்.

டக்ளஸின் கடலட்டை பண்ணைகள் விபரிக்கையில் இந்தப் பண்ணைமுறைத் திட்டங்களை நாம் சரியானஇ தோதான இடங்களில் அமைக்க வேண்டும் என்பதுதான். 

உதாரணமாக வடக்கில் அட்டைப் பண்ணைகளை அமைக்கும் இடங்கள் சரியாகத் தேர்வு செய்யப் பட வேண்டும். 

ஏனெனில் வடக்கிலுள்ள கடல் நிலப்பரப்பானது பல ஆயிரம் களக்கடல் மீனவர்களின் ஆதாரங்களாகும். 

இந்தக் களக்கடலை நம்பித்தான் பல்லாயிரம் கரையோரக் குடும்பங்கள் வாழ்கின்றன. 

உதாரணத்துக்குஇ மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் அட்டைவளர்ப்பு தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு தேர்வு செய்யப் பட்டுள்ள களக்கடற் பரப்பானது முற்றிலும் தவறானது. 

பன்நெடுங்காலமாக இந்தப் "புறவாய்" என்று சொல்லப் படுகின்ற களக்கடலை நம்பித்தான் துறையூர்இ சுருவில்இ மெலிஞ்சிமுனைஇ ஊறுண்டிஇ பருத்தியடைப்பு ஆகிய கிராமங்களின் மீனவர்கள் வாழ்கிறார்கள். 

அதாவது நரையாம்பிட்டியிலிருந்து கிழக்காக வேலணை-புங்குடுதீவு வீதி வரை உள்ள பிரண்டையாற்றுச் சரிவுஇ மற்றும் நரையாம்பிட்டியிலிருந்து தெற்காக பல்லதீவு வரையுமுள்ள களக்கடல்கள். 

இந்த இடங்கள் தீவகக் குடாக்கடலின் உயிரினங்கள் மேய்ச்சலுக்காகவும்இ இனவிருத்திக்காகவும் விளங்கும் இடங்களாகும். 

இத்தகைய இயற்கை வளம் மிக்க சிறப்பான இடங்களை அடைத்து நாம் அட்டைப் பண்ணைகள் அமைப்போமானால் மேலே சொல்லப்பட்ட அத்தனை இயற்கை அம்சங்களும் தடைப்பட்டுஇ அற்றுப் போய்விடும். 

இந்த வளங்களை மட்டுமே நம்பியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் பட்டினிச் சாவுக்குள் தள்ளப் படுவார்கள். 

மேற்படி அட்டைப் பண்ணை அமைப்பதற்கான மாற்றுத் திட்டங்களும் எம்மிடம் இல்லாமலில்லை. இருக்கிறது. 

கடந்த காலங்களில் தாணையமுறைத் தொழில்இ வாடிமுறை மீன்பிடி என தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றன. 

குறிப்பாகஇ மெலிஞ்சிமுனைத் தொழிலாளர்கள் கடலட்டைத் தொழிலுக்காக கல்முனைஇ கவுதாரிமுனைஇ வலைப்பாடுஇ பள்ளிக்குடாஇ நாச்சிக்குடாஇ தேவன்பிட்டிஇ மண்டைக்கல்லாறுஇ குமுழமுனைஇ அரிப்புத்துறைஇ சிலாவத்துறைஇ பளுக்காத்துறை என பருவகாலத் தாணையங்கள் அமைத்துத் தொழில் செய்தவர்கள்தான். 

மேற்படி அட்டைப் பண்ணைகளை பாலைதீவுஇ கற்கடதீவு போன்ற ஆழ்கடலுக்கு நகர்த்துங்கள். அட்டையின் வளர்ச்சியும்இ நிறையும்இ தரமும்கூட இந்த இடங்களில் பண்ணைகள் அமைப்பதால் மிகவும் அதிகமானதாகவும் இருக்கும். 

மெலிஞ்சிமுனைக் களக்கடலில் வளர்த்தெடுக்கப்படும் அதே அட்டைகள் மேற்சொல்லப்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்வோமானால் வருவாய் மூன்று மடங்காக ஆகுவதற்கான முழுச் சாத்தியங்களும் உண்டு. 

ஏனெனில்இ கடலட்டையின் உணவு மண்தான். மெலிஞ்சிமுனைக் களக்கடலில் காணப்படுவது சதுப்பு நிலமும்இ கறுப்புச் சேறுமாகும். 

அதேவேளைஇ பாலைதீவுஇ கற்கடதீவு நிலப்பரப்பானது பெருமணலைக் கொண்டவையாகும். எப்போதும் பெருமணற்பரப்பில் காணப்படும் அட்டைகள் வைரமானதும்இ நிறையானதும்இ முதலாம் தரமானதுமாகும். 

எமது மெலிஞ்சிமுனைக் கிராமத்தில் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளை ஆழ்கடல் நோக்கி நகர்த்துங்கள். 

இந்தக் குடாக்கடல் அட்டைப் பண்ணைகள் அமைப்பதற்கு முற்றிலும் தோதானதல்ல. 

20தனிநபர்கள் சம்பாதிப்பதற்காக ஆயிரக்கணக்கான குடும்பங்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ள முடியாது என கருத்தை வெளியிட்டுள்ளார். 


No comments