யாழ் கந்தர்மடத்தைச் சேர்ந்தவர் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் - நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக காவல்துறையினா தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments