இத்தாலியில் கட்டிடம் இடிந்து வீழ்ந்தது! மூவர் பலி! பலரைக் காணவில்லை!


இத்தாலி சிசிலியில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பில் மூன்று பேர் இறந்தனர் மற்றும் பலர் காணவில்லை என்று இத்தாலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீத்தேன் எரிவாயு வெடிப்பு காரணமாக ராவணுசா நகரில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக இத்தாலியின் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு பெண்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


நான் வீட்டிற்கு திரும்பினேன், இரவு 8 மணியளவில் திடீரென்று விளக்கு அணைந்தது. கூரை மற்றும் தரை கீழே விழுந்தது என ரோசா கார்மினா என்ற பெண் இத்தாலிய செய்தித்தாள் லா ரிபப்ளிகாவிடம் கூறினார்

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்ற பெண் தனது மைத்துனி என்று அவர் மேலும் கூறினார்.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிக்கு உதவுவதற்காக சுமார் 250 மீட்புப்படையினர் ராவணுசாவிற்கு வந்துள்ளனர் என்று சிசிலி சிவில் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. எரிவாயு கசிவு காரணமாக தீயணைப்பு வீரர்கள் முதலில் மீட்புப் பணியில் ஈடுபட சிரமப்பட்டனர் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றர். 

No comments