சுதந்திரக்கட்சி மீது பொதுஜனபெரமுன தாக்குதல்!



பொதுஜனபெரமுன மற்றும் சுதந்திரக்கட்சியிடையேயான மோதல் உக்கிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை பொதுஜனபெரமுன உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

பிரதேசசபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில் சபை அமர்வு இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது மஸ்கெலியா நகரில் சட்டவிரோதமாக  அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே, பொதுஜனபெரமுனவின்; உறுப்பினர் எஸ்.ஏ. திசாநாயக்கவால் கண்ணாடி குவளையில் தாக்கப்பட்டதாக உப தவிசாளர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தனது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில், குறித்த இருவருக்குமிடையிலான மோதலையடுத்து, சபை அமர்வுகள் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.


No comments