கைத்துப்பாகி கைப்பற்றப்பட்டது!

 அம்பாறை மாவட்டம்காரைதீவு கொம்புச்சந்தி பகுதியில் கைத் துப்பாக்கி மற்றும் 2 மகசின்களை பொலிஸார் நேற்று (14) மாலை மீட்டுள்ளனர்.



இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விடுதலைப்புலிகளினால் பாவிக்கப்பட்டதாக நம்பப்படும் வெளிநாட்டு தயாரிப்பான மைக்ரோ 9 எம்.எம். கைத் துப்பாக்கியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

காரைதீவு கொம்புச்சந்திக்கருகாமையில் உள்ள வீடொன்றில் பொலிஸ் குழுவினர் தேடுதலை மேற்கொண்டு இந்த கைத்துப்பாக்கி மற்றும் மகசின்களை மீட்டுள்ளனர்.

குறித்த வீட்டினுள் குறித்த துப்பாக்கியை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் 44 வயது மதிக்க தக்க மகாலிங்கசிவம் அசோக் என்ற சந்தேக நபர் கைதாகியுள்ளதுடன் அங்கிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி மற்றும் மகசின்களை சம்மாந்துறை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர்.

கைதாகிய சந்தேக நபர் சிறிது காலம் தாதிய உத்தியோகத்தராக செயற்பட்டுள்ள நிலையில், கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளுடன் நெருங்கி செயற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments