நெடுங்கேணியில் யுவதி சுட்டுக்கொலை!



இன்று புதன்கிழமை பட்டப்பகலில் வவுனியா நெடுங்கேணியில் யுவதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 31வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி சேனைப்பிளவு பகுதியில் இனந்தெரியாத நபர்கள் வீதியில் மோட்டார் சைக்கிளிpல் பயணித்த பெண் மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டு தப்பித்துள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.


No comments