திறக்க சொன்னார் கோத்தா!



யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில்  உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வீதியை விடுக்க படையினர் கடந்த பல வருடங்களாக மறுதலித்துவருகின்ற நிலையில் ஜனாதிபதி இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு  உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளார் அங்கயன் இராமநாதன்.

இந்த வீதி யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் வீதியாகவும் உள்ளதால் திறந்துவிட ஜனாதிபதியை கோரியிருந்ததாகவும் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.


No comments