சிவகரனிற்கு மீண்டும் விசாரணை!



கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வவுனியா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால், தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனிடம், மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து,  விசாரணைக்குள்ளாக்கப்பட்டள்ளார். 

கடந்த கால சிவில் சமூக செயற்பாடுகள், நடத்தப்பட்ட நிகழ்வுகள் தொடர்பாகவும்  குறிப்பாக, மாவீரர் தின நிகழ்வுகள் சம்பந்தமாகவும் பல்வேறு கோணத்தில் கேள்விகள் தொடுத்து சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக, அவர் தெரிவித்தார்.

"சிவில் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்று சர்வதேச அரங்கில்  ஜனாதிபதி கூறுகிறார். ஆனால்   மறுபுறத்தில் சிவில் அமைப்புக்களை நசுக்க முனைகிறது அரசின் புலனாய்வு  அமைப்புகள். 

  சிவில் சமூக அமைப்புக்களை இலங்கை அரசு தொடர்ந்து   நசுக்க முனைவது வேதனைக்குரிய விடயம் என்று" அவர் தெரிவித்துள்ளார்.

No comments