நெடுங்கேணியில் போராட்டம்!



வவுனியா நெடுங்கேணிப்பகுதியில் முன்னெடுக்கப்படும் நில ஆக்கிரமிப்பு மற்றும் சிங்கள மயமாக்கலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பதாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா மற்றும் சாந்தி உள்ளிட்டவர்களும், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களென பலரும் இணைந்திருந்தனர்.

No comments