இரத்தினபுரம் கொலையாளி கைது!



மூன்று மாதங்களுக்கு முன்னர் கிளிநொச்சி இரத்தினபுரம் கிணற்றில் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பொலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது பயன்பாட்டு கிணறொன்றினுள் பாயினால் சுற்றப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் முற்றுமுழுதாக கொலையென தகவல்கள் வெளியாகியநிலையில் கொலையுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கிளிநொச்சி பொலீஸாரினால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

 


No comments