இலங்கையில் சீன தளம்:அடித்துக்கூறுகின்றது பென்டகன்!



இலங்கையில் இராணுவத் தளம் அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

‘சீன மக்கள் குடியரசை உள்ளடக்கிய இராணுவம் மற்றும் பாதுகாப்பு முன்னேற்றங்கள்’ என்ற தலைப்பில் ஆவணம் நேற்று (04) வெளியிடப்பட்டது.

சீனா இராணுவ பலத்தை நிலைநிறுத்த முயல்வதாக அந்த அறிக்கை கூறுகிறது. இலங்கை உட்பட 13 நாடுகளில் இராணுவ தளங்கள் குறித்து சீனா பரிசீலித்திருக்கலாம்.

சிங்கப்பூர், பாகிஸ்தான், மியன்மார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகியவை அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற நாடுகளில் அடங்கும்.

கூடுதலாக சீனா தனது கடற்படை, வான் மற்றும் தரைப்படைகளின் வலிமையை அதிகரிக்க இந்த வசதிகளை நிறுவ பரிசீலித்து வருவதாக பென்டகன் அறிக்கை கூறியது.

No comments